பக்கங்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2005

சச்சின் டெண்டுல்கரும் அவதூறும்?!

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சச்சின் மேல் ஒரு ஆதங்கம் / கோபம் உண்டு. அதாவது, அவர் இந்தியா இக்கட்டான நேரங்களில் இருக்கும் போது சரியாக விளையாடுவதில்லை. ஒருதின ஆட்டங்களிலும், டெஸ்ட் போட்டிகளிலும், நம் அணி சேஸ் செய்யும்போது விரைவில் ஆட்டமிழந்து விடுவார். நாம் முதலில் மட்டை பிடிக்கும் போதோ அல்லது டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் மட்டுமே அதிக ரன் சேர்ப்பார்; நெருக்கடி நேரங்களில் கைவிட்டு விடுவார். ஆனால் மற்ற வீரர்கள் லாரா, காலிஸ், இன்சமாம், திராவிட் ஆகியோர் நெருக்கடி நேரங்களிலேயே நன்றாக விளையாடுகிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உண்டு. சில நாட்களுக்கு முன்பு தமிழ்மணத்திலேயே ஒருவர் இத்தகைய பதிவினை எழுதியிமிருக்கிறார். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை? இன்றைய cricinfo வலைத்தளத்தில் இது குறித்து புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. படித்துப் பாருங்கள். ஆனால் கட்டுரையாளர் ஏன் 2002 லிருந்து இன்று வரை நடைபெற்ற ஆட்டங்களை மட்டுமே தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ளார் என்பதுதான் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக