பக்கங்கள்

புதன், 6 டிசம்பர், 2006

சன் டிவியின் தங்கவேட்டை

சன் தொலைகாட்சியில் சனி, ஞாயிறு இரவுகளில் ஒளிபரப்பப்படும் தங்கவேட்டை நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பதிலடியாக ராதிகாவின் ராடான் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின்னர் இடையில் நடிகை ஊர்வசி தொகுத்து வழங்கினார். ஊர்வசியைப் பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது. சுரத்தே இல்லாமல் அவர் நிகழ்ச்சியை நடத்தியவிதம் நன்றாக இல்லை. முன்பு, ராஜ் டிவியில் அவரே பல வேடங்களில் தோன்றி நடத்திய நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருக்கிறேன். அப்படியிருந்த அவரா இப்படி! எனும் அளவிற்கு ஊர்வசி நிகழ்ச்சியை நடத்தியவிதம் இருந்தது.

பின் சிறிது காலத்திற்குள்ளேயே ஊர்வசி மாற்றப்பட்டு நடிகை கனிகா (பைவ் ஸ்டார்) அமர்த்தப்பட்டார். கனிகாவின் வரவிற்குப் பிறகு தங்கவேட்டை புதுப்பொலிவு பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு தொழில்முறை தொகுப்பாளினியைவிட கனிகா நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்துகிறார். ரம்யா, குஷ்புவைப்போல் தேவையில்லாமல் கத்திப்பேசாமல் அதேசமயம், மற்ற பெரும்பாலான (ஆண், பெண்) தொழில்முறை தொகுப்பாளர்களைப் போலல்லாது தேவையற்ற உடல் அசைவுகளை விடுத்து, மிகுந்த யதார்த்தத்துடனும், உயிர்ப்புடனும் நிகழ்ச்சியை நடத்துகிறார். எனக்கு இத்தைகைய நிகழ்ச்சிகளில் பொதுவாக விருப்பம் இல்லாவிடினும், கனிகா நடத்தும் அழகிற்காக இந்நிகழ்ச்சியை சிலமுறைகள் முழுவதும் பார்த்திருக்கிறேன். அவரது தமிழும், சிறு குழந்தையைப்போல் அனைவருடனும் பேசும் பாங்கும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும், அவர் பேசும்போது அவரது அழகு இன்னும் அதிகமாகப் பரிமளிக்கிறது.

9 கருத்துகள்:

  1. தங்கவேல்,
    கனிகா பற்றிச் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால், அப்பப்போ குழந்தைகளைக் கொஞ்சம் அதீதமாகவே கொஞ்சுவதும், மற்றும் கேள்விகள் அத்தனை சுவாரஸ்யமாக இல்லாததும் தான் நிரடுகிறது...

    பதிலளிநீக்கு
  2. முத்து தமிழினி சொன்னது
    //அடப் பாவி
    இந்த விசயம் வீட்டுல தெரியுமா? :))//

    மேலும் சொன்னது.

    also add my complaint::))))

    "Inspite of my requests none of my friends are sending their blog postings to me to my gmail id". Even blogger is having an option for that.

    பதிலளிநீக்கு
  3. நன்றி பொன்ஸ்.
    //அப்பப்போ குழந்தைகளைக் கொஞ்சம் அதீதமாகவே கொஞ்சுவதும், மற்றும் கேள்விகள் அத்தனை சுவாரஸ்யமாக இல்லாததும் தான் நிரடுகிறது..//

    இருக்கலாம். நான் சொல்ல வந்தது பிறரைவிட அவர் பரவாயில்லை என்பதே. கேள்விகள் சுவராசியமாக இல்லாதது கனிகாவின் தவறன்றே.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. நன்றி முத்து தமிழினி, ஒரு மாதகால மவுனம் கலைத்து என் பதிவில் பின்னூட்டியது (மின்னஞ்சல் மூலமாக) மிக்க மகிழ்ச்சி. உங்களது நண்பர்களைப் பற்றிய உங்களது ஆவலாதியையும் பிரசுரித்துவிட்டேன்.

    //அடப் பாவி
    இந்த விசயம் வீட்டுல தெரியுமா? :))//

    வீட்டுல முதல்ல வாசிச்சுக் காட்டிட்டுத்தானே பதிவு செய்தேன்.

    பதிலளிநீக்கு
  6. ரம்யாவின் charm வேறு யாருக்கும் வரவில்லை (கனிகாவுக்கும் தான்) என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  7. லொடுக்கு, இப்படியெல்லாம் சபையில் வெளிப்படையாகக் கேட்கக்கூடாது.:-)

    பதிலளிநீக்கு