பக்கங்கள்

வியாழன், 5 அக்டோபர், 2006

திருவாளர் கமல்ஹாசன் குறித்து எனது ஆதங்கம்

சர்ச்சைக்குரியவராக இருப்பது ஒன்றும் திருவாளர் கமல்ஹாசனுக்குப் புதிதல்ல. மூடத்தனங்களும், கட்டுப்பெட்டித்தனங்களும் நிறைந்த ஒரு சமூகத்தில், தன்னுடைய கருத்துக்களாலும், செயல்பாடுகளாலும் நல்ல சலனங்களை ஏற்படுத்தமுனையும் கலைஞனை சராசரி வெகுசன மனோபாவம் சர்ச்சைக்குரியவராகவே கருதும். ஆயினும், 'வேட்டையாடு விளையாடு' ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை அவ்வகைத்தானதல்ல. அப்படத்தில் கமல் ஏற்றிருக்கும் ராகவன் எனும் பாத்திரம் ஒரு காட்சியில் பேசும் வசனம், ஒருபாலின ஈர்ப்புடையோரை, இச்சமூகம் அவர்களைப்பற்றி ஏற்கனவே கொண்டிருக்கும் தவறான (அப்படித்தான் அறிவியல் சொல்கிறது) கருத்தாங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில் வரும் வசனம் ராகவன் எனும் பாத்திரம் பேசும் வசனமாக எடுத்துக்கொள்ளப்படாமல் கமல்ஹாசனின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பேயதிகம். அக்குறிப்பிட்ட வசனத்திற்கு கிடைக்கும் கைதட்டலே இதற்குச் சான்று. ராகவன் பாத்திரத்தை வேறொரு நடிகர் ஏற்று நடித்திருந்தால் அவ்வசனம் இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்திருக்காது. ஏனெனில், மற்றைய நடிகர்களைப் போல் கமல் சமூகத்தை ஒற்றைபரிமாணக்கோணத்தில் பார்ப்பவரல்ல. அவரது திரைப்படங்களில், குறிப்பாக அவரது சொந்தத் தாயாரிப்பில் வெளிவருபவற்றில் இதனை அவதானிக்கலாம். சமூக ஓர்மையுள்ள கமல் எவ்வாறு இவ்வசனம் பேசி நடிக்க சம்மதித்தார் என்பது எனக்கு ஆச்சிரியமாகவேயுள்ளது. முன்பொருமுறை செவ்வியொன்றில், திரைப்படப் படப்பிடிப்புக் காட்சியொன்றில் நடிகைகளக் குறித்து அவதூறாகப் பேசிய பார்வையாளர் ஒருவரை தான் அடித்துவிட்டதால், தனக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்த மன உளைச்சலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதுபோன்றே, சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்த தென்மாவட்ட சாதிக்கலவரங்களுக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தனது 'தேவர் மகன்' திரைப்படமும் ஒரு காரணம் என்பதையுணர்ந்து, தான் இனிமேல் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கமல், வே-வி படத்தில் அப்படியொரு வசனத்தை பேசி நடித்திருப்பது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. திருவாளர் கமல்ஹாசனை எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் கொண்டிருந்தாலும், அவரது இச்செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையேயளிக்கிறது.

14 கருத்துகள்:

  1. தங்கவேல்,

    வாங்க..பீட்டா உதவியுடன் களமிறங்கி இருக்கிறீர்கள்.

    செய்தியோடையில் எரர் இருப்பதாக செய்தி வருகிறது.சரி செய்யவும்.

    கமலைப்பற்றிய உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். நான் படத்தை பார்க்கவில்லை என்றாலும் கமலை இந்த விஷயத்தில் ஆதரித்து ஒரு பதிவு போட்டிருந்தாலும் உங்கள் பதிவு மற்றும் இன்னொரு படம் பார்த்த தோழமையின கருத்தையும் பார்க்கும்போது கமல் இதை தவிர்த்திருக்கலாம் என்று படுகிறது.

    கமலின் மீதான நம்மின் எதிர்ப்பார்ப்புதான் இதற்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  2. //பீட்டா உதவியுடன் களமிறங்கி இருக்கிறீர்கள். செய்தியோடையில் எரர் இருப்பதாக செய்தி வருகிறது.சரி செய்யவும்.//

    எவ்வாறு சரி செய்வது? தாங்கள் உதவமுடியுமா? என்னால் (மூன்று நாட்களாக மண்டை காய்ந்தபின்பும்)பதிவுபட்டைக்கருவி போன்றவற்றை நிறுவ முடியவில்லை.

    //கமலைப்பற்றிய உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். நான் படத்தை பார்க்கவில்லை என்றாலும் கமலை இந்த விஷயத்தில் ஆதரித்து ஒரு பதிவு போட்டிருந்தாலும் உங்கள் பதிவு மற்றும் இன்னொரு படம் பார்த்த தோழமையின கருத்தையும் பார்க்கும்போது கமல் இதை தவிர்த்திருக்கலாம் என்று படுகிறது. கமலின் மீதான நம்மின் எதிர்ப்பார்ப்புதான் இதற்கு காரணம்.//

    ரொம்ப சரி முத்து.

    பதிலளிநீக்கு
  3. //எவ்வாறு சரி செய்வது? //

    தங்கவேல்,
    இங்கே பாருங்கள். தமிழ்மணம் பீட்டாவுக்கான தனி அறிவிப்புகள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. வாங்க பொன்ஸ்,

    //தங்கவேல்,
    இங்கே பாருங்கள். தமிழ்மணம் பீட்டாவுக்கான தனி அறிவிப்புகள் இருக்கின்றன.//

    நான் அதைப் படித்துவிட்டேன். நான் பிளாக்கர் பீட்டாவிற்கு மாறிவிட்டாலும் இன்னும் பழைய டெம்ப்ளேட்டையே பயன்படுத்துகிறேன். பிரச்சனை என்னுடய செய்தியோடையில் இருப்பதாக தமிழ்மணம் சொல்கிறது. (முத்துவும் அதையே சொன்னார்) அதை சரிசெய்யத்தான் என்னால் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. தங்கவேல், உங்கள் இடுகைகளின் html scripting புரியா விட்டாலும் இந்த செய்தியோடை பிரச்சனை வரலாம்.

    நான் காட்டிய சுட்டியில், ஏற்கனவே பயன்படுத்திய வார்ப்புருவிலும் மாற்றங்கள் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். மேலும் அங்கே பின்னூட்டமிடவும் சொல்லி இருக்கிறார்கள். அதில் உள்ள மாற்றங்களைப் படிப் படியாகச் செய்து பார்க்கலாமே.

    பதிலளிநீக்கு
  6. Dear Pons,

    Muthu (Thamizini) has come forward to my rescue. Hope he will sort it out. Thank you for your support.

    பதிலளிநீக்கு
  7. What is the dialog you are referring to you....

    If not here, you can post it in my blog

    பதிலளிநீக்கு
  8. தங்கவேல்,
    வெளிப்படையாக பார்க்கையில் கமல் ஒரு சிந்தனாவாதியாகவும், பகுத்தறிவாளராகவும் தோன்றும். ஆனால் அவருக்குள்ளே இருக்கும் மிருகம் அவ்வப்போது தன் கோர முகத்தை வெளியே காட்டும். வே.வி யிலும் இது தான் நடந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  9. Doctor Bruno,
    வே.வி படத்தில் உச்சகட்ட காட்சியில் (climax) வில்லன்களில் ஒருவரைப் பிடித்து வைத்திருக்கும் கதாநாயகன் ராகவன் (கமல்), மற்றொரு வில்லனைப் பார்த்து டேய் நீங்க என்ன ஹோமோசெக்ஸுவலா (homosexul) எனக் கேட்பதோடு மட்டுமல்லாது உன் பொண்டாட்டி என் கையில் என்றும் வசனம் பேசுவார். இதைத்தான் என்னைப்போல் பலரும் குறை கூறியிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  10. Sreesharan,

    உங்கள் வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏதாவது உதாரணம் கூறமுடியுமா? கமல் ஒன்றும் அப்படிப்பட்டவரில்லை.

    பதிலளிநீக்கு
  11. இதைத் தான் ஆளவந்தான் படத்துல, “கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்” அப்படினு பாடினார் போல...

    பதிலளிநீக்கு
  12. இதைத் தான் ஆளவந்தான் படத்துல, “கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்” அப்படினு பாடினார் போல...

    பதிலளிநீக்கு
  13. தங்கவேல் சினிமாவுக்கும் ஒருவரின் நிஜ நம்பிக்கைகளுக்கும் முடிச்சு போடுவது சரியானதா படல. அது ஒரு சிறந்த அளவுகோல் அல்ல.
    அதுக்காக கமல் புனித பிம்பம்னு நான் சொல்ல வரல.

    கமலின் நிஜ காரக்டர்ல அல்லது அதன் சாயல்லதான் அவர் படம் நடிக்கணும்னா இத்தன படம் இவர் பண்ணியிருக்க முடியுமா?

    ஹோமோசெக்சுவல்ச அந்த கதாபாத்திரம் திட்டுறதா வந்தா அதை நடித்து முடிப்பதே கமலின் கடமையாயிருக்கும்.

    இந்த வசனங்கள் ஹொமோசெக்சுவாலிட்டிய இழிவுசெய்வத விட அந்த வில்லன் பாத்திரங்களை தூண்டிவிட பயன்படுத்தும் யுக்தியாகவே எடுத்துக்கணும்.

    இவ்வளவு சொல்றீங்களே ஏன் நீங்க என்கவுண்டர்ல கமலின் முதல் மனைவிய கொன்னவுங்கள போட்டுத்தள்ளுறத ஏன் சுட்டிக்காட்டல?
    என்னை பொறுத்தவரை அதுதான் அநியாயமாகப் படுது. அதை ஒரு போலீஸ் செயல் என விட்டுவிட்டீர்கள் இல்லையா..அதுபோல இந்த வசனத்தையும் விடவேண்டியதுதான்.

    நாம் இன்னும் நம் (சினிமா) ஹீரோக்கள் புனித பிம்பமாய் இருக்கணும்னு நினைக்கிறோம் ..யோசிக்கவைக்கும் விஷயம்.

    பதிலளிநீக்கு
  14. திரு. சிறில் அலெக்ஸ்,

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. சிந்திக்க வேண்டிய கருத்து. தற்போது சற்று பிஸியாக (உண்மையிலேயே)இருப்பதால், பின்னர் விளக்கமளிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு