பக்கங்கள்

வியாழன், 8 பிப்ரவரி, 2007

ஜவுளிக்கடையும், பெண்களும்

எனக்குப் பெண்களிடம் பிடித்த விசயங்களில் ஒன்று அவர்களது முடிவெடுக்கும் திறன். ஒரு சராசரி ஆணைவிட சராசரிப் பெண் மிக விரைவாக முடிவெடுத்துவிடுவார். ஆயினும், அவர்கள் முடிவெடுப்பதில் திணறும் இடம் தங்களுக்கான துணியை (துணையை அல்ல) தெரிந்தெடுப்பதில்தான் உள்ளது. பெண்களுக்குப் பொதுவாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது டிரஸ்ஸிங் சென்ஸ் அதிகம். மேலும் அவர்களுக்குத் தமக்குப்பிடித்த (அது கலர்களிலோ அல்லது டிசைன்களிலோ) துணிவகைகளைத் தேர்ந்தெடுப்பதில் சாய்ஸும் அதிகம். ஆண்களைப்போல் ஒரு 10 - 12 கலர் வகைகளோ அல்லது கட்டம், கோடு, பிளைன் என்றோ ஒரு வரம்பிற்குட்பட்ட சாய்ஸுகளோ அல்ல; பெண்களுக்கு இவ்விசயத்தில் எண்ணிலடங்கா சாய்ஸ் இருக்கிறது. ஆயினும் பெரும்பாலான பெண்கள் துணிவாங்க ஜவுளிக்கடைக்குப் போனால் அக்கடையையே ஒரு அலசு அலசி வந்துவிடுகிறார்கள். இதுகுறித்து ஆனந்த விகடன் போன்றவற்றில் அடிக்கடி ஜோக்ஸ் வருவதுண்டு. சென்னையில் நல்லி சில்க்ஸ் போன்ற சில கடைகளில் பெண்களுடன் வரும் சில துர்பாக்கியசாலி கணவன்மார்கள் (என்னையும் சேர்த்துத்தான்), அப்பாக்கள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கென்றே தனியாக இருக்கைகள் அமைத்துள்ளார்கள். மேலும் குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பராமரிப்பதற்கென்றே தனியாக கிரச்சும் வைக்கப்போவதாக காற்றுவாக்கில் செய்தி வந்தது.

எனக்கும், என் சகதர்மிணிக்கும் பொதுவாக ஊடல் நடைபெறுவதற்கு பின்ணனிக்காரணம் துணி தேர்ந்தெடுக்கும் விவகாரமாகவேயிருக்கும். நாங்களிருவரும் துணிவாங்கக் கடைக்குப் போனால், குறிப்பாக அவருக்குத் துணியெடுக்க, அன்று எங்களிருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே நான் பெரும்பாலும் அவர் துணி தேர்ந்தெடுக்கும்போது சற்று ஓரமாக ஒதுங்கிக் கொள்வேன். (சில சமயம் பிகர் பார்ப்பதும் உண்டு என்பது வேறு விசயம்)

அதேபோல்தான் என் அம்மாவும். சிறுவயதில் அவருடன் துணிக்கடைக்குச் சென்றால் அவர் எந்தச் சேலையைக் காண்பித்து இது நல்லாயிருக்காடா என்றாலும், நான் கண்ணை மூடிக்கொண்டு நல்லாயிருக்குதும்மா என்று சொல்வேன். பிற்பாடு என் இந்த உத்தியைக் கண்டுபிடித்துக் கொண்ட என் அம்மா அதன்பின்பு என்னை துணிக்கடைக்கு அழைத்துச் செல்வதேயில்லை.

பெரும்பாலான பெண்கள் இவ்விசயத்தில் அவ்வளவு எளிதில் திருப்தி அடைந்திடுவதில்லை என்பதே உண்மை. பாவம், பெண்கள் பகுதியில் வேலை பார்க்கும் கடை ஊழியர்கள். வேலை செய்பவர் ஒரு துணியை எடுத்துப் போடும்போதே அப்பெண்ணின் கவனம் அடுத்த ரேக்கிலுள்ள மற்றொரு சேலையிலிருக்கும். கொடுமை என்னவென்றால் அப்பெண்தான் முதலில் அச்சேலையை எடுத்துக்காண்பிக்குமாறு கேட்டிருப்பார். ஒரு மணித்துளியில் அப்பெண்ணின் மனம் கங்காருப் பாய்ச்சல் பாய்ந்திருக்கும்; அல்லது மற்றொரு பெண் தேர்ந்தெடுக்கும் சேலையில் அவரது கவனம் குவிந்திருக்கும்.

ஒருவழியாக சேலை தேர்ந்தெடுக்கும் படலம் முடிந்து அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே கடைக்காரன் பளிச்சுன்னு லைட்டப் போட்டு ஏமாத்திட்டான், அங்க பார்த்தப்போ வேறுமாதிரி கலர்ல தெரிஞ்சிது, இப்போ வேற கலர்மாதிரியில்ல இருக்கு என்றோ அல்லது இந்தக் கலர் புடவை என்கிட்ட ஏற்கனவேயிருக்கு என்றோ (பெரும்பாலான பெண்கள் நூற்றுக்கணக்கான புடவைகள் வைத்திருப்பர்; ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தன்னிடம் முந்நூற்றிற்கும் அதிகப் புடவைகள் இருப்பதாக ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.) சொல்லி நாளைக்கு இந்தச் சேலையை மாற்ற வேண்டும் என்பர்.
எனக்குத் தெரிந்த பெண்களிடம் (மனைவி, அம்மா, தமக்கைகள், தோழிகள் உட்பட), பெண்களின் இச்செயலுக்கு சரியான விளக்கம் தரத் தெரியவில்லை. ஆகவே பெண் வலைப்பதிவாளர்களே (ஆண் வலைப்பதிவர்களும் சொல்லலாங்கோய்) இதற்கான உளவியல் காரணம் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஹி.. ஹி... J J J

கொசுறு தகவல்: நேற்றுமாலை என் அம்மாவுடன் ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தேன்.

17 கருத்துகள்:

  1. என்னங்க இப்படிப் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்திச் சொல்லிட்டீங்க?

    நானெல்லாம் ஜவுளிக்கடைக்குப் போனால் ரொம்ப சீக்கிரத்துலே துணிகளை
    எடுத்துருவேன். ஊர்லேதான் சகோதரிகள்( பொம்புளைங்கதாங்க) நூத்துக்கணக்குலே
    புடவைகள் வச்சுக்கிட்டு இருக்கற கலர், இல்லாத கலர்ன்னு கன்ஃப்யூஸ் ஆயிருவாங்க.

    எனக்கு இந்தக் கவலையே இல்லீங்க. எல்லாமே முக்காவாசி கறுப்புதான்:-))))
    அதுவுமில்லாம இங்கெ நான் இருக்கற ஊருக்கு எல்லாம் 'ச்சலேகா':-)

    ஆனா ஒண்ணுங்க, இன்னொருத்தருக்கு வாங்கும்போது மட்டும் பத்தெ நிமிஷம்போதும்:-)))

    பதிலளிநீக்கு
  2. ஜவுளிக்கடைகளில் துணியெடுப்பதில் மட்டுமல்ல, எந்த விஷயத்தை தேர்ந்தடுப்பதிலும் பெண்கள் ஆண்களைவிட ஒருப் படி மேல்தான். They always wants to be in the safer side.

    பதிலளிநீக்கு
  3. //என்னங்க இப்படிப் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்திச் சொல்லிட்டீங்க?//

    வாங்க துளசி, நான் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்திச் சொல்லலை. என் பதிவிலுள்ள கீழ்க்கண்ட வரிகளைப் படியுங்கள்.

    //பெரும்பாலான பெண்கள் துணிவாங்க ஜவுளிக்கடைக்குப் போனால் அக்கடையையே ஒரு அலசு அலசி வந்துவிடுகிறார்கள்//

    மேலும் நீங்கள் ஒரு விதிவிலக்காக இருக்கலாம்.

    //ஜவுளிக்கடைகளில் துணியெடுப்பதில் மட்டுமல்ல, எந்த விஷயத்தை தேர்ந்தடுப்பதிலும் பெண்கள் ஆண்களைவிட ஒரு படி மேல்தான். They always want to be in the safer side. //

    Thaey have to be - இல்லையா அனானி.

    பதிலளிநீக்கு
  4. // கொசுறு தகவல்: நேற்றுமாலை என் அம்மாவுடன் ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தேன் //

    இறுதியில் எழுதியிருக்கவேண்டியது -
    இந்தப்பதிவை ஜவுளிக்கடையிலிருந்துதான் எழுதுகிறேன்.
    :-)

    பதிலளிநீக்கு
  5. இத்தனை சரியாக சொல்வதென்றால் எவ்வளவு அனுபவித்து கஷ்டப் பாட்டிருக்க வேண்டும்.அய்யோ பாவம்
    உங்க வீட்லயாவது குறைபடுவதோட நிறுத்திக்குவாங்க.நாம அப்படியில்லை.மறுபடியும் கடைக்குப் போய் மாத்தினால்தான் சாப்பாடே போடுவோம்..ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  6. //இறுதியில் எழுதியிருக்கவேண்டியது -
    இந்தப்பதிவை ஜவுளிக்கடையிலிருந்துதான் எழுதுகிறேன்.
    :-) //

    ஆனாலும் உங்களுக்கு ரொம்பக் குறும்புதான் அனானி. :-))

    பதிலளிநீக்கு
  7. வாங்க கண்மணி.
    //அய்யோ பாவம்
    உங்க வீட்லயாவது குறைபடுவதோட நிறுத்திக்குவாங்க.நாம அப்படியில்லை.மறுபடியும் கடைக்குப் போய் மாத்தினால்தான் சாப்பாடே போடுவோம்..ஹி..ஹி//

    அடப்பாவி மனுஷி. இது ரொம்ப மோசம், ஆமா சொல்லிப்புட்டேன். நீங்க திருநெல்வேலி ஆளு போல இருக்கே. உங்க பதிவெல்லாம் ரொம்ப நக்கலாயிருக்கே அதை வச்சு கேக்கேன்.

    பதிலளிநீக்கு
  8. இன்னா நைனா நம்ம பழையப் பதுல்லாம் பாக்காம நம்மள தின்னவேலி ஆளான்னுகேக்கிய?
    பேட்டா நம்மள்கி ஒரு குன்சானா ஆத்மா[மி].அல்லா மாதிரியும் கலாய்க்கும் .கண்டு புடிக்க நென்சா பேஜாராப் பூடும்.
    மாமா நீங்க உங்காத்து மாமிக்கு புடவ வாங்கறத மட்டும் பாருங்கோ.அதுக்கே ஒமக்கு நேரம் போதலையோன்னோ?

    பதிலளிநீக்கு
  9. என்ன உம்ம பாசை ஒரே கலீஜாக் கீது

    பதிலளிநீக்கு
  10. எனக்கு கடைக்கு செல்வதென்றாலே அலர்ஜி. கூட்டமாய் இருந்தால் நுழையவே மாட்டேன். சேலை வாங்கி ஒரு 15 வருஷம் ஆகியிருக்கும். ஆனாலும் நிறைய பெண்களைன் இந்த பொறூமையை கேட்டு அதிசயித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. தங்கவேல்,
    அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" தொகுப்பின் தலைப்புக்கான கதை சொல்வதும் நீங்கள் கேட்பதற்கும் மெல்லிய தொடர்பிருப்பது போல் இருக்கிறது..

    கதை நாயகியின் மாமியாருக்கும், அந்த மாமியாரின் மாமியாருக்குமிடையேயான பனிப்போரை விவரித்திருப்பார். அன்றைய சமையலை முடிவு செய்யும் பொறுப்பு தன்னிடம் இருப்பதாலேயே, தான் அந்த வீட்டு எஜமானி என்று கதை நாயகியின் மாமியார் நினைத்து, நம்பியே வாழ்ந்து முடிவதாக வரும்..

    அதே போல், (குழந்தைகள் படிப்பு, தன்னுடைய வேலை போன்ற) மற்ற விஷயங்களில் தன்னிஷ்டம் போல் தெரிவு செய்ய முடியாத பெண்கள், உடை விஷயத்திலாவது ஆற அமர முடிவெடுக்கலாமே என்று இப்படி இருக்கிறார்களோ என்னவோ..

    படிக்கிற காலம் முழுவதும் என் உடைகளை என் தாயும் தங்கையும் மட்டுமே தேர்வு செய்வார்கள். வேலை செய்ய வெளியே வந்த பின்னர் தான் நானே சொந்தமாக போய் உடை வாங்கத் தொடங்கினேன்.

    நிறம் முக்கியம் தான். ஆனால், என்னிடம் இருக்கும் நிறம் இல்லாத நிறம் என்று எந்தப் பிரச்சனையும் இல்லை. பெரும்பாலும் நான் புதிதாக வாங்கும் உடைகள் நீலம் மற்றும் கரும்பச்சையில் தான் இருக்கும். பிடித்த நிறம் என்பதால், கடைக்குப் போனவுடன் பொறுக்கிவிடுவதால், அதே கலரில் அலமாரி நிறைந்திருந்தாலும் கவலையில்லை :)

    மற்றுமொரு காரணம், சிவப்பும் இளம் மஞ்சளும் சார்ந்த நிறங்கள் என் தங்கையின் மனங்கவர்ந்தவை. அதனால், இருவரின் உடைகளும் கலக்கும் போது கொஞ்சம் வெரைட்டியான நிறங்கள் எங்கள் இருவருக்குமே கிடைத்துவிடும்..

    எங்கள் வீட்டுப் புதுமொழி : தங்கையுடையாள் உடைக்கஞ்சாள் ;)

    பதிலளிநீக்கு
  12. நன்றி பொன்ஸ்,

    இன்னாடா, உங்க பின்னூட்டம் இன்னும் வர்லியேன்னு பார்த்தேன்.

    பெண்களைப் பற்றி எழுதினதும்தான் எழுதினேன் வந்த பின்னூட்டங்களில் பெரும்பாலும் பெண்களிடமிருந்தே வந்திருகின்றன. இதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம்னு நிறைய ஆண்கள் ஒதுங்கிவிட்டாதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு ஆணாதிக்கமோ?

    //அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை"// - என் வீட்டுப் பரணில் படிக்கப்படாமலேயே தூங்குகிறது.

    //கதை நாயகியின் மாமியாருக்கும், அந்த மாமியாரின் மாமியாருக்குமிடையேயான பனிப்போரை விவரித்திருப்பார். அன்றைய சமையலை முடிவு செய்யும் பொறுப்பு தன்னிடம் இருப்பதாலேயே, தான் அந்த வீட்டு எஜமானி என்று கதை நாயகியின் மாமியார் நினைத்து, நம்பியே வாழ்ந்து முடிவதாக வரும்.. //

    அது சரி, அக்கதைக்கும் என் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்? ஏதேனும் உள்குத்து?!

    //அதே போல், (குழந்தைகள் படிப்பு, தன்னுடைய வேலை போன்ற) மற்ற விஷயங்களில் தன்னிஷ்டம் போல் தெரிவு செய்ய முடியாத பெண்கள், உடை விஷயத்திலாவது ஆற அமர முடிவெடுக்கலாமே என்று இப்படி இருக்கிறார்களோ என்னவோ.. //

    இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் அப்படியில்லையே! பெரும்பாலான தேர்வுகள் (என்னைத் தெரிவு செய்தது உட்பட) என் மனைவினுடையவையே. ஒருவேளை இதை அவரிடம் கேட்டால்தான் உண்மை என்னவென்று தெரியுமோ என்னவோ?

    //எங்கள் வீட்டுப் புதுமொழி : தங்கையுடையாள் உடைக்கஞ்சாள்//

    ரசித்தேன். நெடிய, நல்ல பின்னூட்டதிற்கு நன்றி, பொன்ஸ்.

    பதிலளிநீக்கு
  13. கல்யாணம் ஆன புதிதில், உடை தேர்வு செய்வதில், என் ஆலோசனையக் கேட்ட என் மனைவி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, உங்களுக்கு கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லை , என்று கூறுகிறார்..

    பதிலளிநீக்கு
  14. //கல்யாணம் ஆன புதிதில், உடை தேர்வு செய்வதில், என் ஆலோசனையக் கேட்ட என் மனைவி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, உங்களுக்கு கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லை , என்று கூறுகிறார்//

    ஹி.. ஹீ.. எனக்கும் இதே வசைதான் இப்பொழுதெல்லாம் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா15 மே, 2007 அன்று PM 1:24

    poongothai

    You writting sounds that you suffered lot when you go for dress selection with ladies (wife, mother, sister etc.) but i pity on your wife or mother who accompanys you while shopping.

    You have asked for the reason behind this.. Reason as you told gents have less choice (my view)and also less patience.

    "You have written when ladies go for shopping they will round the whole shop". I agree with you this happens not only for their dress selection, when they select for gents also. I will guide my husband when he go for his dress selection. you have this colour shade this will not match for u etc.,. I enjoy myself and make my husband also enjoy while shopping for him. but most of the gents will not do that...

    பதிலளிநீக்கு
  16. புளியமரத்தின் கதை எதுவும் போடுவீர்கள் என்றுப்பார்த்தால் புடவை வாங்கப் போனேன் புண்ணாக்கு வாங்கி வந்தேன் என்று போட்டுள்ளீர்கள்.

    காற்றுவாக்கில் வந்த செய்தி, உள்ளூர்ப்பெண்கள் புடவை வாங்க சென்றால் பக்கத்து வீட்டு அம்புஜம்,பங்கஜம் கூட்டணியுடன் தான் செல்வதாகாவும், கணவன் மார்களை கழட்டி விட்டு விடுவார்கள் என்றும் கேள்விப்பட்டேன் அப்படி எனில் நீங்கள் சென்னைவாசி அல்லவா?

    பதிலளிநீக்கு