பக்கங்கள்

புதன், 21 பிப்ரவரி, 2007

சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ்

நேற்று சென்னை புரசைவாக்கத்திலுள்ள ரிலையன்ஸ் சில்லரை விற்பனைக் கடைக்குச் சென்றிருந்தேன். வெளியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அட்டகாசமாகயிருந்தது. ஏதோ திருவிழா பார்க்க வந்ததுமாதிரி ஒரே கூட்டம் (அடியேனையும் சேர்த்துத்தான்); தள்ளூ முள்ளு நடக்காதகுறைதான். கடை மிகச் சிறியது. நம்ம ஸ்பென்ஸர், நீல்கிரீஸ், திரிநேத்ரா அளவுக்குக்கூட இல்லை. ஒருவேளை இத்துறையில் ஆழம் பார்த்தபின்பு கடையை விரிவாக்குவார்களோ என்னவோ?

நான் முதலில் இது காய்கறிகள் மட்டும் விற்கும் கடை என நினைத்தேன். பெயர்ப்பலகையும் அவ்வாறே நினைக்கத்தூண்டியது. (Relaince fresh) ஆயினும் பலசரக்குக் கடைமாதிரி மற்ற மளிகைச் சாமான்களும் இருந்த்தன. ஆனால் காய்கறிகள்தான் நிறைய இடங்களை அடைத்திருந்தன. தரம் ஒன்றும் நம்மூர் கோவை பழமுதிர் நிலையம் போல் இல்லை. (ஒரு வேளை நேற்று அவ்வாறில்லாமலிருந்திருக்கலாம்!) ஆனால் ஒருவிசயத்தில் நான் பெரிய வேறுபாட்டைப் பார்த்தேன். அது சில்லரை வணிகமும் தொழில்முறை நேர்த்தியுடன் (Professionalism) செய்யப்படலாம் என்பதே. ரிலையன்ஸ் மற்ற நிறுவனங்களைவிட இதில் சற்று நேர்த்தியுடன் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு சிறு உதாரணம்; பணம் கட்ட வரிசையில் நிற்பதற்கு ஏதோ விமான நிலையத்தில் immigration counter ல் நிற்பது போன்ற நேர்த்தியுடன் இருந்தது.

இனிமேல் சில்லரை வணிகமும் இந்தியாவில் பணம் கொழிக்கும் துறையாகவும், வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கும் துறையாகவும் இருக்கும் எனக் கூறுகிறார்கள். மேலும் உலகின் வேறு பல பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் இத்துறையில் கால்பதிக்க உள்ளார்கள் என்ற செய்தியும் அடிபடுகிறது. இத்தகைய பெரிய நிறுவனங்களால் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் (Contract farming) செய்யப்பட்டு மொத்தமாக அவை கொள்முதல் செய்யப்படும் என்று படித்திருக்கிறேன். இதனால் இடைத்தரகர் இல்லாமல் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆயினும் இந்திறுவனங்களின் காலகாலமாக இத்துறையிலுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ இன்னும் பெரும்பான்மை இந்தியர்கள் தமக்குத் தெரிந்த சில்லரை வணிகர்களையே நாடுவர்கள் என நினைக்கிறேன்.

9 கருத்துகள்:

  1. கேள்விப்பட்டனே இதைப் பத்தி ... அதுக்குள்ள கடை திறந்தாச்சா ... சென்னை வந்தா கட்டாயம் பாக்கணும்.

    விவசாய விற்பனை/சந்தை விஷயங்களில இது ஒரு மிகப் பெரிய நல்ல மாற்றமா வரப் போகுதோன்னு பயங்கர த்ரிலிங்கா இருக்கு.

    இதைப் பத்தி இன்னும் யாரும் டிபேட் பண்ணலையா நல்லது கெட்டது எல்லாம்?

    ஜெ

    பதிலளிநீக்கு
  2. தங்கவேல்,
    இன்னமும் விளக்கமான பதிவாக இருக்குமென்று எதிர்பார்த்தேன் :(

    professionalism என்பது, வெறும் பணம் கட்டுவதற்கு அழகாக, வரிசையாக நிற்பதில் அடக்கிவிட்டீர்கள் :(. எனக்குத் தெரிந்து ஸ்பென்ஸர்ஸ் போன்ற கடைகளில் ஆரம்பத்திலிருந்தே இந்த வரிசை பாதுகாக்கப் பட்டு வருகிறது.

    ஹைதராபாத்தில் ஜெயண்ட் என்றொரு சில்லறை வணிகக் கடை உண்டு.. ஹைப்பர் மார்க்கெட் என்கிறார்கள் - அதாவது நம்ம சூப்பர் மார்க்கெட்டுக்கு அடுத்த லெவல். இங்கே வரிசைக்கான கயிறுகள் கட்டி வைத்திருக்கும் விதத்தில் நீங்கள் வரிசை மீறி போகவே முடியாது. கூடியவரை வரிசையை முறைப்படுத்திவிடுகிறார்கள்.. ஏன், நமது லேண்ட்மார்க் போன்ற கடைகளில் கூட இது போன்ற வரிசையைப் பார்க்கலாமே..

    இதைத் தவிர வேறென்ன professionalஆக இருந்தது என்று ஒரு விளக்கப் பதிவு ப்ளீஸ்...

    பதிலளிநீக்கு
  3. //இதைப் பத்தி இன்னும் யாரும் டிபேட் பண்ணலையா நல்லது கெட்டது எல்லாம்?//

    வருகைக்கு நன்றி ஜெ. இவ்விசயம் பற்றி யாரேனும் தமிழ்வலைப்பதிவுகளில் விவாதம் செய்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. //இன்னமும் விளக்கமான பதிவாக இருக்குமென்று எதிர்பார்த்தேன்//

    ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும் பொன்ஸ். என் பதிவில் சற்று கூடுதலாக தகவல்கள் இருக்கும் என நீங்கள் நம்புவது தெரிகிறது. என்னளவிலும் மிகுந்த ஏமாற்றமளித்த பதிவு இது. திருப்தி இல்லாமல்தான் பதிவு செய்தேன்; நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற பேராசையில் வந்த குறைபிரசவம்.

    //வேறென்ன professionalஆக இருந்தது என்று ஒரு விளக்கப் பதிவு ப்ளீஸ்...//

    வேறொன்றும் எனக்குத் தெரியவில்லை. முடிந்தால் சில்லரை வணிகத்தில் ஈடுபடும் ரிலையன்ஸ் பொன்ற பெரிய நிறுவனங்களால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து, ஒரு நுகர்வோன் என்ற முறையில், எழுத முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சாலையோரத்தில் அம்பது, நூறுக்கு வியாபாரம் பார்க்கும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கும்பல் அது. அதை அழகாக, வரிசையாக நின்று செய்தால்தானே..வெளியே கேட்கும் அழுகுரல்கள் நம் செவிகளுக்கு கேட்காமல் போகும்..?

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஆழியூரான். உங்க ஆதங்கம் எனக்குப் புரிகிறது. எனினும் நான் இக்கட்டுரையை எனது சித்தாந்தச் சார்பை விட்டு விட்டு, ஒரு நுகர்வோனாக, எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு தங்கவேல்.வெகு சிலரே தொட்ட சப்ஜெக்ட்.பாராட்டுக்கள்

    இதற்கு விரிவான பதில் இடவேண்டும்.அல்லது தனிப்பதிவே போடவேண்டும்.வெளியூர் செல்லவிருப்பதால் வந்து எழுதுகிறேன்.

    நன்றி
    செல்வன்

    பதிலளிநீக்கு
  8. நன்றி செல்வன். விரைவில் உங்க ஸ்டைலில் ஒரு பதிவோ, பதிலோ போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. தங்கவேல்,

    இதுபற்றி விரிவான கட்டுரையை என் பதிவில் எழுதி உள்ளேன்.இதுபற்றி மேலும் பல நண்பர்கள் பதிவுகளின் மூலம் விவாதிப்பார்கள் எனவும் கருதுகிறேன்.நல்லதொரு விவாதத்தை துவக்கிய உங்களுக்கு நன்றி

    http://holyox.blogspot.com/2007/03/249.html

    அன்புடன்
    செல்வன்

    பதிலளிநீக்கு