பக்கங்கள்

திங்கள், 5 மார்ச், 2007

தமிழக அரசியல் - ராஜீவ்காந்தி படுகொலையை முன்வைத்து

தமிழக அரசியல், 1972 ற்குப் பிறகு, தனிமனித வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அரசியல் தலைவரின் மீதான தனிப்பட்ட காழ்ப்பினை தனது அரசியல் ஆதாயத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டவர் மறைந்த எம். ஜி. ராமச்சந்திரன். இது அவரின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதாநாயகன் Vs. வில்லன் என்ற இரட்டை நிலையின் அரசியல் தளத்திலான விரிவாக்கம். திரைப்படங்களில் எம். ஜி. ஆருக்கு வெற்றியைக் கொடுத்த இக்கருத்தாக்கம், சரியாகச் சொன்னால் புனைவு, அரசியல் சூழலிலும் அவருக்குக் கைகொடுத்ததுதான் தமிழக அரசியலில் ஏற்பட்ட ஆகக் கொடுமையான ஒரு நிகழ்வு.

இப்புனைவை தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரை விடவும் பன்மடங்கு அதிகமாக தனது (அரசியல்) ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியை முன்வைத்து ஜெ செய்துவரும் அரசியல் ஆகக்கழிவானது. கடந்த சடமன்றத் தேர்தலின்போது 'கலைஞரின் கைமாறு' என்ற அபத்தமான கற்பனையைக்கொண்டு ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சியைவிடவும், ஆகக் கேவலமான நிகழ்ச்சியொன்றை நேற்றிரவு 10 மணிக்கு ஜெயா டிவி ஒளிபரப்பியது.

'சென்னை சங்கமம்' என்ற நிகழ்ச்சியை நடத்தியதில் கனிமொழியும், தமிழ் மையம்- ஜெகத் கஸ்பரும் எவ்வாறு அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் என்ற வகையில் ஆரம்பித்த அந்திகழ்ச்சி ராஜீவ்காந்தி படுகொலையில் வந்து முடிந்தது. மொட்டைத் தலைக்கும், முழங்காலிற்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதான் போலும். கனிமொழியும், ஜெகத் கஸ்பரும் முன்னின்று நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு அரசு இயந்திரம் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் (?) அதுகுறித்தான உண்மையான அக்கறையோடு ஜெயா டிவி இந்நிகழ்ச்சியை வழங்கியிருந்தால் ஒரு ஆக்கபூர்வமான பணியை அது செய்திருக்கும். அதுவல்ல ஜெயா டிவியின் (ஜெயலலிதாவின்) நோக்கம், ராஜீவ்காந்தி கொலையை மீண்டும் கிளறி அரசியல் குளிர்காய நினைப்பதே அவரின் உண்மையான நோக்கம். கருணாநிதியை ஒரெ கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாகக் (கனிமொழியை முன்னிறுத்துவது மற்றும் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களுக்குக் கைமாறு!?) கூறிக்கொள்ளும் ஜெ, இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் சாதிக்க நினைப்பதுதான் அபத்தத்தின் உச்சகட்டம்.

தமிழக வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்ற ஒரு கருதுகோள் உண்டு; அது உண்மையோ இல்லையோ, ஆனால் நிகழ்கால தமிழக வரலாற்றில் ஜெயலலிதா ஒரு கரும்புள்ளி என்றால் அது மிகையல்ல.

14 கருத்துகள்:

  1. //ஜெயலலிதா ஒரு கரும்புள்ளி என்றால் அது மிகையல்ல.//

    நற..நற..

    யோவ்வ்வ் புளியமரம்... வெறும் புள்ளி மட்டும் தானா?

    நற..நற...

    பதிலளிநீக்கு
  2. //யோவ்வ்வ் புளியமரம்... வெறும் புள்ளி மட்டும் தானா?//

    மிகப்பெரிய ஓட்டை என்பதே சரி!

    பதிலளிநீக்கு
  3. அதானே மாம்ஸ், அது புள்ளியல்ல "பிளாக் ஹோல்" . அதற்காக களப்பிரரின் ஆட்சியைகேவலப்படுத்த வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  4. ஜெகத் கஸ்பார் வைகோவுக்கும் நல்ல நண்பர்.கலை நிகழ்ச்சியைக் கொலை நிகழ்வோடு ஒப்பிடும் சின்னத்தனத்தை என்னென்பது?போய்க்கு வாக்கப் பட்டா புளிய மரத்துலதான் குடியிருக்கனும் என்பார்கள். வைகோ பாடுதான் பாவம்.

    பதிலளிநீக்கு
  5. //போய்க்கு வாக்கப் பட்டா புளிய மரத்துலதான் குடியிருக்கனும் என்பார்கள். வைகோ பாடுதான் பாவம்.

    //


    நம்ப புளியமரத்தை தாக்குவதை வண்மையாக கண்டிக்கிறேன். ஆமா!

    பதிலளிநீக்கு
  6. பொய்யென்றால் அதை தைரியமாக எதிர்த்து வழக்கு தொடர்வது தானே? ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் தானே இருக்கிறது? அதற்கு துணிவில்லாவிட்டால், ரயில் வராத இருப்பு பாதையில் தலை வைத்து இன்னொரு முறை உயிர் விடச் சொல்லுங்கள்.
    வைத்திருப்பது அனைத்தும் தேசத் துரோகிகளுடன் கள்ள உறவு - தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பவனுக்கும், தாயைக் கூட்டிக் கொடுப்பவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதற்கு விளக்குப் பிடிக்கும் உங்களைப் போன்றவர்களும், மற்ற கொபசெக்களும், எதற்கும் உங்கள் வீட்டுப் பெண்டினரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தளபதி கண்ணில் பட்டால் அவ்வளவுதான், பருத்தி வீரன் படக் கிளைமாக்ஸ் தான்.
    - ஜெகத் கஸ்பர்

    பதிலளிநீக்கு
  7. பா.பா இப்ப இருக்கிற அய்யனாரு மூஞ்சிக்கு முன்னமே இருந்த உங்க படம் தேவலை .பயம்மாக்கீது நைனா.

    பதிலளிநீக்கு
  8. //பொய்யென்றால் அதை தைரியமாக எதிர்த்து வழக்கு தொடர்வது தானே? //
    உண்மைன்னு மொதல்ல நிரூபிக்கச் சொல்லுங்க அண்ணாச்சி.. புனைவுக்கும் புரளிக்கும் பயந்து போய், மீடியா மேல் கேஸ் போட, ஆட்சியில் இருப்பது ஒங்க அம்மாவா என்ன?!

    இது ஜனநாயக ஆட்சி.. நீங்க சொல்றதச் சொல்லுங்க. மூளையுள்ள எங்காளுங்க யோசிப்பானுங்க.. ஒங்கள மாதிரி, எதிர்க்கட்சி சேனல நிறுத்த வேண்டிய அவசியம் கூட எங்களுக்கு இல்ல..

    பதிலளிநீக்கு
  9. வற்றாத சொம்பும்
    சுருட்டாத பாயுமே
    எம் குல அடையாளம்


    எம்.ஜி.ஆரை எப்படி கவிழ்த்தோம் என்று புரிகிறதா?

    பதிலளிநீக்கு
  10. //எதற்கும் உங்கள் வீட்டுப் பெண்டினரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.//

    எங்கள் காமகேடிகள் கண்ணில் பட்டால் ஸ்வர்ணமால்யா கதி தான்.

    பதிலளிநீக்கு
  11. இங்கே போய் பார்க்கவும்
    http://www.ephesians-511.net/thiruvasagam.html

    - அனானி ஜெகத் கஸ்பர்

    பதிலளிநீக்கு
  12. எங்கே எனது முந்தைய பின்னூட்ட ஆதாரம்? மூளையுள்ளவங்க சேர்ந்து யோசிக்க ஆரம்பிச்சிடீங்களோ?

    - அனானி ஜெகத் கஸ்பர்

    பதிலளிநீக்கு
  13. ஜெ.ஜெ புத்தி எப்போதும் கோணங்கித்தனம் தான். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. தமிழக வாக்காள பெரு மக்களின் புத்தியை என்ன சொல்வது? வாக்காளர் திருந்தாத வரை ஜெ வீட்டில் கொண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
  14. தமிழக வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் இருண்டகாலம்.
    யாருக்கு?
    பார்ப்பனருக்கு.

    பதிலளிநீக்கு