பக்கங்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2007

சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பு!!!

நண்பர் பாலபாரதியின் ஒருங்கிணைப்பில், சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏப்ரல் 22 அன்று (ஞாயிற்றுக் கிழமை) சென்னை, தி. நகர் நடேசன் பூங்காவில் பிற்பகல் 3.30 முதல் மாலை: 7.30 வரை சந்திப்பு நடைபெறும். இது குறித்த அறிவிப்பொன்றை அவரது வலைப்பதிவில் காணலாம். தமிழ் வலையுலகின் முக்கியமான ஆளுமைகள் சிலர் கலந்துகொள்வார்கள் எனத்தெரிகிறது.

சென்னையில் வசிக்கும் வலையுலக நண்பர்களே நீங்களனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். வெளியூர் நண்பர்களும் முடியுமானால் சந்திப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பாலபாரதியின் பதிவில் பின்னூட்டம் வழியாகவோ அல்லது அவரது கைத்தொலைபேசியில் (99400 45507) அழைத்தோ தங்கள் வருகையை உறுதி செய்யவும். என்னையும் தொடர்பு கொள்ளலாம். - 98413 90327.
நன்றி

11 கருத்துகள்:

  1. பாலபாரதி பதிவிலேயும் வருகைக்கு உறுதி கொடுத்தாச்சு.
    இங்கேயும் ஒரு "present sir" சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அடுத்தமுறை நானும் கலந்துக்க விரும்பறேன் சார்.

    பதிலளிநீக்கு
  3. இங்கே ஆட்டம் போட அனுமதி உண்டா?

    பதிலளிநீக்கு
  4. //இங்கே ஆட்டம் போட அனுமதி உண்டா?//

    No, Sorry Anony.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் ஆதிசேஷன் கட்டாயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. //நண்பர் ஆதிசேஷன் கட்டாயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.//

    அவர் மலேசியாவிலன்னா இருக்கார் , உடனே வரமுடியுமா ?

    பதிலளிநீக்கு
  7. ஒரு கூட்டத்துக்கு எத்தனை விளம்பரம்?

    பதிலளிநீக்கு
  8. //தங்கவேல் said...
    //இங்கே ஆட்டம் போட அனுமதி உண்டா?//

    No, Sorry Anony.
    //

    தங்கவேல் அவர்களை கண்டித்து புளியமரத்தில் தொங்கும் போராட்டம் நடத்தப் போகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. //
    தங்கவேல் அவர்களை கண்டித்து புளியமரத்தில் தொங்கும் போராட்டம் நடத்தப் போகிறோம்.//

    புளியமரத்தில் தொங்கும் போராட்டமா? தொங்க விடப்படும் போராட்டமா? விபரமாக சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  10. சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தொங்கும் போராட்டன் தான்... முதலில் தொங்கி.. எங்கள் எதிப்பை தொடங்கி வைப்பவர் பாலாபாய்!

    பதிலளிநீக்கு