பக்கங்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2007

ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...

ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான்.

அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

6 கருத்துகள்:

  1. //அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர்.
    எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

    நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை.//

    நிதர்சனமான உண்மை....

    எல்லோரையும் போல ஒரு ஜல்லிப் பதிவிடாமல் அரசியல்வாதிகளை துகிலுரித்திருக்கிறீர்கள்.....இதில் கருணாநிதியின் வேகத்திற்குப் பின் உள்ள அரசியலையும் சொல்லியிருந்தால் பதிவு இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்த்தேசியவாதிகளை சரியாக அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

    தமிழ்த்தேசியவாதிகள் அனைவரும் முற்போக்காளர்கள் போல் வேடம் தரித்தாலும், அவர்களிடம் மறைந்துள்ள பார்ப்பனீயமோகம், மேல்சாதிமோகம், தலித் விரோத மனப்பான்மை, பெண்ணடிமைத்தனத்தை ஆதரித்தல் ஆகிய குணங்களை எளிதில் மறைக்கமுடியாது.

    பார்ப்பனர்களை எதிர்ப்பதாக இவர்கள் கூறுவது, தாங்கள் புதிய பார்ப்பனர்(New Brahmins)களாகும் முயற்சியே.

    பதிலளிநீக்கு
  3. matham manithanukku sevai seivathaga irukka vendum.
    mathathirga manithan illai.
    - enbathai purinthu madam piditha(RSS,BJP) sakthikalidam irunthu samanya makkal vilagi irukkavendum.
    kitaikkavirukkum nanmaikalai karuthil kondu
    vetrikaramaga sethu thittathai
    amal paduthavendum.
    tamilnattin then paguthiyai singapore ponra mukkia thuraimuga nagarmaga mattravendum.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சரியான பதிவு.எனக்கு குமரி கண்டத்தை பற்றி எல்லாம் தெரியாது.ஆனால் சுற்று சூழல் பற்றி யாருக்குமே கவலை இல்லயே என்றுதான் வருத்தமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. என் பெயரும் தங்கவேல் என்ற காரணமும் இருக்க, உங்களது பதிவுகள் அனைத்தும் படித்தேன் தங்கவேல். அருமையாக இருக்கிறது. இத்தனை நாள் தவற விட்டு விட்டேன் என்ற வருத்தம் உட்பட.

    பதிலளிநீக்கு